search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய 4 நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர்
    X

    தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய 4 நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர்

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய மூத்த நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர். #supremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

    சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

    இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும், 4 நீதிபதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த மோதலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் செலமேஸ்வர் உள்பட 4 மூத்த நீதிபதிகள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் நியமித்தது. இந்த குழு நேற்று தலைமை நீதிபதியை சந்தித்தது.

    இந்த நிலையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய மூத்த நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.

    4 நீதிபதிகள் மீது நட வடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதியிடம் புகார் கூறப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புன்னகை மட்டும் செய்தார். #Tamilnews
    Next Story
    ×