search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 52 சதவீத ஓட்டுப்பதிவு
    X

    உத்தரபிரதேசத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 52 சதவீத ஓட்டுப்பதிவு

    உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 52 சதவீத ஓட்டுப்பதிவானது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று 2-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 25 மாவட்டங்களில் நடந்த இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் தலைவிதியை ஒரு கோடியே 29 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயிக்கிறார்கள். 2-வது கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தனது குடும்பத்தினருடன் லக்னோவில் ஓட்டுபோட்டார்.

    நேற்று நடந்த 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் 52 சதவீத ஓட்டுப்பதிவானது.

    லக்னோ மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சிகளும் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர்களை நிறுத்தின. இந்த தேர்தலில் யார்? வெற்றி பெற்றாலும் அவர் லக்னோவின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெறுவார். 
    Next Story
    ×