என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருகிராமம் பள்ளி மாணவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் விடுவிக்கப்பட்டார்
Byமாலை மலர்22 Nov 2017 10:55 PM GMT (Updated: 22 Nov 2017 10:55 PM GMT)
குருகிராமம் பள்ளி மாணவன் பிரத்யுமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துநர் அசோக்குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி அருகே குருகிராமத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (வயது 7) என்ற மாணவன் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். இதுதொடர்பாக அந்த பள்ளியின் பேருந்து நடத்துனரான அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை அந்த நடத்துனர் பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பள்ளியில் நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைக்கும் நோக்கத்தில் இந்த கொலையை அந்த மாணவன் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 16 வயதான அந்த மாணவனிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர். குருகிராமம் போலீசார், நடத்துநரை இந்த வழக்கில் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடத்துநர் அசோக்குமார் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், 50 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்று தெரிவித்தது. நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து பேருந்து நடத்துநர் அசோக்குமார் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி அருகே குருகிராமத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (வயது 7) என்ற மாணவன் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். இதுதொடர்பாக அந்த பள்ளியின் பேருந்து நடத்துனரான அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனை அந்த நடத்துனர் பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பள்ளியில் நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைக்கும் நோக்கத்தில் இந்த கொலையை அந்த மாணவன் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 16 வயதான அந்த மாணவனிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர். குருகிராமம் போலீசார், நடத்துநரை இந்த வழக்கில் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடத்துநர் அசோக்குமார் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், 50 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்று தெரிவித்தது. நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து பேருந்து நடத்துநர் அசோக்குமார் விடுவிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X