search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பத்திரிக்கையாளரை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் கைது
    X

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பத்திரிக்கையாளரை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் கைது

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ. மெட்ரோ ரெயில் நிலையத்தில் பத்திரிக்கையாளர் உள்பட இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தியதாக போலீசார்  25 வயதான வாலிபரை கைது செய்துள்ளனர்.

    ரெயில்வே நிலையத்தில் டீ வியாபாரம் செய்யும் அந்த வாலிபர் 15 நிமிட இடைவெளியில் பெண் பத்திரிக்கையாளர் உள்பட 2 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார்.



    அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது வாலிபர் பத்திரிக்கையாளரை தொட்டு விட்டு செல்வது அவர்கள் அவனுடன்  சண்டையிட்டதும் வாலிபர் ஓடும் போது அவர்கள் விரட்டி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் செவ்வாயன்று 9.30 மணியளவில் நடந்து உள்ளது இது குறித்து தீன் தயாள் உபாத்யாயி மார்க்கில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அங்கு இருந்த டீக்கடையில் வேலை பார்த்த அகிலேஷ் என்ற வாலிபரை கைது செய்து உள்ளனர். போலீசார் கூறும் போது  குற்றவாளியை  கண்டுபிடிக்க  ஐந்து குழுக்கள் உருவாக்கப்பட்டன. இரண்டு நாட்களுக்கு மேல் 5,000 க்கும் அதிகமானவர்களை விசாரணை செய்யப்பட்டனர் என கூறினார்.
    Next Story
    ×