search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பிரதமர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
    X

    டெல்லியில் பிரதமர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து

    டெல்லியில் பிரதமர் அலுவலக வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் சவுத் பிளாக்கில் பிரதமரின் அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது.

    உடனடியாக 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 20 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது.

    பிரதமர் அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள 242-ம் எண் அறையில்தான் தீவிபத்து ஏற்பட்டது.

    தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட ஆய்வின்படி பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×