என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்ததால் பழைய வேனில் குடியிருக்கும் 4 குழந்தைகள்
Byமாலை மலர்26 Sep 2017 11:41 AM GMT (Updated: 26 Sep 2017 11:41 AM GMT)
கேரள மாநிலம் கோட்டயத்தில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் முன்வராததால் 4 குழந்தைகள் பாட்டியின் பராமரிப்பில் பழைய வேனுக்குள் வாழ்கிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் புன்னம் புழாவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). இவரது மனைவி குஞ்சுமோள் (34). இவர்களுக்கு 14 வயதில் பெண் குழந்தையும், 9, 6 மற்றும் 2 வயதில் 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி சந்தோஷ் (48) என்பரை கொன்று புதைத்தனர். இதனால் தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனால் 4 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்தனர்.
இந்நிலையில் குழந்தைகளின் பாட்டி தங்கம்மாள் (60) குழந்தைகளுக்கு ஆதரவு காட்ட முன் வந்தார். வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி உரிமையாளர் கூறினார். அதன்படி அவர்கள் வெறியேறினர். வேறு இடத்தில் வாடகைக்கு வீடு பார்த்தபோது கொலைகார தம்பதியின் குழந்தைகளுக்கு வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை. மழை, வெயிலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருக்க இடமின்றி தவித்தனர்.
இந்நிலையில் பாட்டி தங்கம்மாள் பழைய இரும்பு கடைக்கு சென்றார். அங்கு என்ஜின் இல்லாத பழைய வேனை ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கினார். அதனை குழந்தைகளின் பெற்றோர் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பு நிறுத்தினார். அதில் 4 குழந்தைகளையும் தங்க வைத்தார். தங்கம்மாள் குழந்தைகளுடன் அதே காரில் வசித்து வருகிறார். வேனில் குளியல் அறை, படுக்கை அறை மற்றும் படிக்கும் அறை என இடங்களை மாற்றி அமைத்தார். இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க சார்ஜ் லைட்டை பயன்படுத்தி வருகிறார்.
பெற்றோரின் குற்றச் செயலால் குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் புன்னம் புழாவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). இவரது மனைவி குஞ்சுமோள் (34). இவர்களுக்கு 14 வயதில் பெண் குழந்தையும், 9, 6 மற்றும் 2 வயதில் 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி சந்தோஷ் (48) என்பரை கொன்று புதைத்தனர். இதனால் தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனால் 4 குழந்தைகளும் ஆதரவின்றி தவித்தனர்.
இந்நிலையில் குழந்தைகளின் பாட்டி தங்கம்மாள் (60) குழந்தைகளுக்கு ஆதரவு காட்ட முன் வந்தார். வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி உரிமையாளர் கூறினார். அதன்படி அவர்கள் வெறியேறினர். வேறு இடத்தில் வாடகைக்கு வீடு பார்த்தபோது கொலைகார தம்பதியின் குழந்தைகளுக்கு வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை. மழை, வெயிலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருக்க இடமின்றி தவித்தனர்.
இந்நிலையில் பாட்டி தங்கம்மாள் பழைய இரும்பு கடைக்கு சென்றார். அங்கு என்ஜின் இல்லாத பழைய வேனை ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கினார். அதனை குழந்தைகளின் பெற்றோர் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பு நிறுத்தினார். அதில் 4 குழந்தைகளையும் தங்க வைத்தார். தங்கம்மாள் குழந்தைகளுடன் அதே காரில் வசித்து வருகிறார். வேனில் குளியல் அறை, படுக்கை அறை மற்றும் படிக்கும் அறை என இடங்களை மாற்றி அமைத்தார். இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க சார்ஜ் லைட்டை பயன்படுத்தி வருகிறார்.
பெற்றோரின் குற்றச் செயலால் குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X