search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறவை மோதியதால் இண்டிகோ விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்
    X

    பறவை மோதியதால் இண்டிகோ விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பறவை மோதியதால் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது.
    இண்டிகோவிற்கு சொந்தமான விமானம் ஒன்று கொல்கத்தாவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு இன்று காலை புறப்பட்டது. இன்று காலை சரியாக 10.58-க்கு விமானம் புறப்பட்டது. விமானம் டேக்ஆஃப் ஆகிய அடுத்த நிமிடத்தில் பறவை ஒன்று விமானத்தில் மோதியது.

    இதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் விமானி. பின்னர் விமானத்தை கொல்கத்தாவிற்கே திருப்பிய விமானி, 11.59 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார்.



    விமான நிலைய இயக்குனர் இதுகுறித்து கூறுகையில் ‘‘கொல்கத்தா விமான நிலையத்திற்கு திரும்பிய விமானம், பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என விமானி தகவல் தெரிவித்தார். உடனடியாக ரன்வே சென்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறிய பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது’’ என்றார்.
    Next Story
    ×