என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்திக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: ‘உங்கள் குடும்பத்தின் 4 தலைமுறை ஆட்சியில் செய்தது என்ன?’
Byமாலை மலர்16 Sep 2017 9:12 PM GMT (Updated: 16 Sep 2017 9:12 PM GMT)
நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் 4 தலைமுறை ஆட்சி செய்திருக்கிறது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும்” என பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
ராஞ்சி:
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர் அங்கிருந்தவாறு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை சாடி வருகிறார். இதற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா நேற்று பதில் அளித்தார்.
ராஞ்சியில் ஹார்மு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியபோது, “அமெரிக்காவில் இருந்து கொண்டு ராகுல் காந்தி நாம் என்ன செய்தோம் என்று கேட்கிறார். அதற்கு ஜார்கண்டில் பதில் சொல்ல நாம் வந்திருக்கிறோம். நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் 4 தலைமுறை ஆட்சி செய்திருக்கிறது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “ராகுல் காந்தி செய்ததை விட நாங்கள் மூன்று மடங்கு அதிகமாக செய்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “வாஜ்பாய் இந்த மாநிலத்தை உருவாக்கினார். பிரதமர் மோடி இப்போது இந்த மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். ஆயிரம் நாட்களில் இந்த மாநிலத்தை முதல்-மந்திரி ரகுபர் தாஸ் மாற்றிக்காட்டியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர் அங்கிருந்தவாறு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை சாடி வருகிறார். இதற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா நேற்று பதில் அளித்தார்.
ராஞ்சியில் ஹார்மு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியபோது, “அமெரிக்காவில் இருந்து கொண்டு ராகுல் காந்தி நாம் என்ன செய்தோம் என்று கேட்கிறார். அதற்கு ஜார்கண்டில் பதில் சொல்ல நாம் வந்திருக்கிறோம். நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் 4 தலைமுறை ஆட்சி செய்திருக்கிறது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “ராகுல் காந்தி செய்ததை விட நாங்கள் மூன்று மடங்கு அதிகமாக செய்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “வாஜ்பாய் இந்த மாநிலத்தை உருவாக்கினார். பிரதமர் மோடி இப்போது இந்த மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். ஆயிரம் நாட்களில் இந்த மாநிலத்தை முதல்-மந்திரி ரகுபர் தாஸ் மாற்றிக்காட்டியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X