என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.: பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி
Byமாலை மலர்9 Sep 2017 11:27 AM GMT (Updated: 9 Sep 2017 11:27 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமி மீது பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் நகருக்கு உட்பட்ட கவிநகர் பகுதியில் ஒரு ஆறு வயது சிறுமி இன்று பள்ளி முடிந்து, பள்ளி வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற அந்த சிறுமி மீது அவர் வந்த பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் வாகன சக்கரத்தில் சிக்கிய சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் பலியான சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வாகன ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறு வயது சிறுமி மீது பள்ளிவாகனம் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X