என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தீவிரவாதிகளுக்கு நிதி உதவி: காஷ்மீர்-டெல்லியில் 16 இடங்களில் சோதனை
புதுடெல்லி:
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இதனால் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பவர்களை மத்திய புலனாய்வுக் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக சமீப காலங்களில் டெல்லி, காஷ்மீர் பகுதிகளில் தேசிய புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தியது.
கடந்த மாதம் 17-ந்தேதி ஜம்முவில் தொழில் அதிபர் சகுர்அகமது ஷாவை கைது செய்தது. இவர் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் இன்று 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 11 இடங்களிலும், டெல்லியில் 5 இடங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த பணம் யார் மூலம் செல்கிறது என்பதை கண்டறிய இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை என்.ஐ.ஏ. கைப்பற்றியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்