என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘சசிகலா கடைவீதிக்கு வந்ததை பார்த்தேன்’: கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் பேட்டி
Byமாலை மலர்23 Aug 2017 3:20 AM GMT (Updated: 23 Aug 2017 3:20 AM GMT)
“சிறையில் இருக்கும் சசிகலா எம்.ஜி.ரோடு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்ததை பார்த்தேன்” என்று கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு முத்து மாணிக்கம் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கோலார் தங்கவயலை சேர்ந்த கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறைக்கு வந்த பின்னர் சிறிது நாட்களிலேயே சசிகலா சிறை அதிகாரிகளை தனது கைகளில் வைத்துக்கொண்டு சிறை கைதிகளைபோல் அல்லாமல் சாதாரண மக்கள் போன்று சிறையில் வாழ்வதற்கான வசதியை வாங்கி உள்ளார்.
கைதிகளுக்கான சிறை நடைமுறையில் சசிகலா இல்லை. சிறை விதிமுறைகளை அவர் மீறி உள்ளார். இதுதொடர்பாக சசிகலாவுக்கு எதிராக பரப்பன அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடந்த மாதம்(ஜூலை) 29-ந்தேதி புகார் அளித்தேன். புகார் கொடுத்து 20 நாட்களுக்கும் மேலாகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூரு வந்தால் எனது நண்பருடன் எம்.ஜி.ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட செல்வோம். அப்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ரோட்டில் உணவு சாப்பிட சென்றபோது முஸ்லிம்கள் அணியும் பர்தா உடை அணிந்து அங்கு நின்ற சசிகலாவை பார்த்தேன்.
சிறை கைதி எம்.ஜி.ரோட்டுக்கு ‘ஷாப்பிங்’ வந்தது நம்ப முடியாததாக இருந்தது. இதனை உறுதிபடுத்தும் வகையில் சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து அனைத்து வசதிகளை பெற்றதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியதை பத்திரிகைகளில் படித்தேன்.
வெளியில் தான் ஊழல் செய்தார்கள் என்றால் சிறையிலும் வந்து சசிகலா ஊழல் செய்து இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் தங்கவயலை சேர்ந்த கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறைக்கு வந்த பின்னர் சிறிது நாட்களிலேயே சசிகலா சிறை அதிகாரிகளை தனது கைகளில் வைத்துக்கொண்டு சிறை கைதிகளைபோல் அல்லாமல் சாதாரண மக்கள் போன்று சிறையில் வாழ்வதற்கான வசதியை வாங்கி உள்ளார்.
கைதிகளுக்கான சிறை நடைமுறையில் சசிகலா இல்லை. சிறை விதிமுறைகளை அவர் மீறி உள்ளார். இதுதொடர்பாக சசிகலாவுக்கு எதிராக பரப்பன அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடந்த மாதம்(ஜூலை) 29-ந்தேதி புகார் அளித்தேன். புகார் கொடுத்து 20 நாட்களுக்கும் மேலாகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூரு வந்தால் எனது நண்பருடன் எம்.ஜி.ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட செல்வோம். அப்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ரோட்டில் உணவு சாப்பிட சென்றபோது முஸ்லிம்கள் அணியும் பர்தா உடை அணிந்து அங்கு நின்ற சசிகலாவை பார்த்தேன்.
சிறை கைதி எம்.ஜி.ரோட்டுக்கு ‘ஷாப்பிங்’ வந்தது நம்ப முடியாததாக இருந்தது. இதனை உறுதிபடுத்தும் வகையில் சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து அனைத்து வசதிகளை பெற்றதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியதை பத்திரிகைகளில் படித்தேன்.
வெளியில் தான் ஊழல் செய்தார்கள் என்றால் சிறையிலும் வந்து சசிகலா ஊழல் செய்து இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X