என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: தீவிரவாதிகள் குறித்து போஸ்டர் வெளியிட்டது டெல்லி காவல்துறை
Byமாலை மலர்12 Aug 2017 1:10 PM GMT (Updated: 12 Aug 2017 1:10 PM GMT)
சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் குறித்து போஸ்டரை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் குறித்த போஸ்டரை டெல்லி போலீசார் நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் கூறுகையில், “போஸ்டர்களில் காணப்படும் தீவிரவாதிகள் குறித்து தகவல் கிடைத்தால், 011-24641278 மற்றும் 011-2301670 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் டெல்லி முழுவதும் 14 வேன்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள்.
அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள்’’ என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் குறித்த போஸ்டரை டெல்லி போலீசார் நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் கூறுகையில், “போஸ்டர்களில் காணப்படும் தீவிரவாதிகள் குறித்து தகவல் கிடைத்தால், 011-24641278 மற்றும் 011-2301670 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் டெல்லி முழுவதும் 14 வேன்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள்.
அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள்’’ என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X