search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன தொழில் நுட்பம் மூலம் மத்திய அரசு ரூ.57 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தியது: பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்
    X

    நவீன தொழில் நுட்பம் மூலம் மத்திய அரசு ரூ.57 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தியது: பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்

    நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.57 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளதாக மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கூறினார்.
    புதுடெல்லி:

    கம்பெனி சட்ட திருத்த மசோதா குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. நேற்று அதன் முடிவில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் பதில் அளித்துப் பேசினார்.

    அப்போது அவர், “தகவல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓட்டைகளை அடைத்து, ஊழலை தடுத்த முதல் அரசு, இந்த அரசு தான்” என பெருமிதத்துடன் கூறினார்.

    தொடர்ந்து, “தற்போது செயல்படுத்தப்படுகிற திட்டங்களில், பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ.57 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட பிற அம்சங்களை மத்திய அரசு பயன்படுத்தி முறைகேடுகளை தடுத்து வருவதை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை. 
    Next Story
    ×