search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி : ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏ., புற்றுநோயால் மரணம்
    X

    உ.பி : ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏ., புற்றுநோயால் மரணம்

    உத்தரபிரதேசம் மாநிலம் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ மதுரா பிரசாத் பால் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் உள்ள சிகண்ட்ரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதுரா பிரசாத் பால் (70) கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் மிகுந்த பாதிப்புக்குள்ளாயிருந்த மதுரா பிரசாத் பாலை அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அழைத்துச் சென்றனர்.

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மதுரா பிராசாத்தின் உயிர் பரிதாபமாக பிரிந்தது. மதுரா பிரசாத் பால் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக கான்பூர் கீதா நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜ.க. தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    மதுரா பிரசாத் பாலின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×