என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி : ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏ., புற்றுநோயால் மரணம்
Byமாலை மலர்22 July 2017 8:00 AM GMT (Updated: 22 July 2017 8:00 AM GMT)
உத்தரபிரதேசம் மாநிலம் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ மதுரா பிரசாத் பால் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் உள்ள சிகண்ட்ரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதுரா பிரசாத் பால் (70) கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் மிகுந்த பாதிப்புக்குள்ளாயிருந்த மதுரா பிரசாத் பாலை அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மதுரா பிராசாத்தின் உயிர் பரிதாபமாக பிரிந்தது. மதுரா பிரசாத் பால் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக கான்பூர் கீதா நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜ.க. தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மதுரா பிரசாத் பாலின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் உள்ள சிகண்ட்ரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதுரா பிரசாத் பால் (70) கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் மிகுந்த பாதிப்புக்குள்ளாயிருந்த மதுரா பிரசாத் பாலை அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மதுரா பிராசாத்தின் உயிர் பரிதாபமாக பிரிந்தது. மதுரா பிரசாத் பால் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக கான்பூர் கீதா நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், உ.பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜ.க. தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மதுரா பிரசாத் பாலின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X