search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுரோட்டில் கன்றுகுட்டியை வெட்டிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து ‘சஸ்பெண்டு’
    X

    நடுரோட்டில் கன்றுகுட்டியை வெட்டிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து ‘சஸ்பெண்டு’

    கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரெஜிஸ் தலைமையில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டதற்கு ரெஜிசை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளதை கண்டித்து கேரளாவில் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரெஜிஸ் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது நடுரோட்டில் கன்றுக்குட்டியை வெட்டி இறைச்சியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ரெஜிசை கட்சியில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×