search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயிலில் சசிகலாவுக்கு கிடைத்த புதிய தோழி
    X

    ஜெயிலில் சசிகலாவுக்கு கிடைத்த புதிய தோழி

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திருட்டு வழக்கில் கைதானவர் தற்போது புதிய தோழியாக கிடைத்துள்ளார்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று 2½ மாதங்கள் ஆகிறது. அவரையும் இளவரசியையும் அடிக்கடி சந்தித்து பேசுவது இளவரசியின் மகன் விவேக் மட்டும் தான். கட்சி நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்திக்க வருவது இல்லை.

    ஒரே ஒருமுறை தான் தினகரன் சசிகலாவை சந்தித்து உள்ளார். சசிகலாவின் வக்கீல்கள் மட்டும் அடிக்கடி வந்து சசிகலாவை சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சசிகலாவுக்கு தற்போது சிறையில் புதிய தோழி கிடைத்துள்ளார். அவரது பெயர் பமீலா. திருட்டு வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருவதுடன் அவருக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளையும் செய்து வருகிறாராம்.
    Next Story
    ×