search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொட்டல்புதூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    பொட்டல்புதூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    புனித ஹஜ் யாத்திரையின் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடையம்:

    பொட்டல்புதூரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக புனித ஹஜ் யாத்திரையின் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்கேஎம். சிவக்குமார் தலைமை வகித்தார். 

    கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முருகதாஸ் வரவேற்றார். இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில கலை இலக்கிய பிரிவு ஆலடி சங்கரையா, முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் துரை, கிழக்கு மாவட்ட மகளிரணி தனித்தங்கம், ம.ம.க. மாவட்ட பொருளாளர் கோதர்மைதீன், முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல்காதர், த.மு.மு.க. ஒன்றிய தலைவர் மீரான் முகைதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×