என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டராம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து மாணவி பலி
Byமாலை மலர்18 Jan 2018 12:52 PM GMT (Updated: 18 Jan 2018 12:52 PM GMT)
தண்டராம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து 9-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தண்டராம் பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம் பள்ளிபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் பூமதி (வயது 14). தண்டராம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவில் மேலும் 1 மாணவன், 3 மாணவிகள் உடன் வந்தனர்.
குடியனூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பினார். அப்போது ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த பூமதி சம்பவ இடத்திலே இறந்தார். மற்ற மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தண்டராம்பட்டு போலீசார் மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X