search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டராம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து மாணவி பலி
    X

    தண்டராம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து மாணவி பலி

    தண்டராம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து 9-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தண்டராம் பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம் பள்ளிபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் பூமதி (வயது 14). தண்டராம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவில் மேலும் 1 மாணவன், 3 மாணவிகள் உடன் வந்தனர்.

    குடியனூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பினார். அப்போது ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் பலத்த காயமடைந்த பூமதி சம்பவ இடத்திலே இறந்தார். மற்ற மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தண்டராம்பட்டு போலீசார் மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×