என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே மனைவி இறந்த வேதனையில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீதர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது42). பிளம்பர். இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான சாந்தி(21)க்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மதுகுடிக்கும் பழக்கம் உள்ள சீனிவாசன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் சாந்தி தனக்கு வழங்கப்படும் உதவித்தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
அவ்வப்போது சாந்தி பணத்தை வாங்கி செல்லும் சீனிவாசன் மதுகுடித்து வந்தார். அதுபோல நேற்று முன்தினம் சாந்தியிடம் இருந்து பணத்தை வற்புறுத்தி வாங்கி சென்று மதுகுடித்தார். இதனால் மனமுடைந்த சாந்தி வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று மாலை மனைவியின் உடலை அடக்கம் செய்து விட்டு சீனிவாசன் தான் குடியிருந்த வாடகை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் காரியம் முடியும் வரை இந்த வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என்றும் இந்த வீட்டில் தங்கி இருந்தால் மனைவியின் நினைவாகவே இருக்கும் என்று கூறி உறவினர் வீட்டுக்கு சென்று தங்குமாறு அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் மனைவியின் தற்கொலைக்கு காரணமாகி விட்டோம் என்ற வேதனையிலும், போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணைக்கு பயந்து போன சீனிவாசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நள்ளிரவு வீட்டின் உரிமையாளர் தூங்கிய நிலையில் வீட்டின் பின்பக்கமாக வந்து மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை சீனிவாசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து கரிக்காலம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி இறந்த மறுநாளே கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்