search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
    X

    நெல்லையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

    சாலையில் நடந்த சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    கூடங்குளத்தை சேர்ந்தவர் பவுல். இவரது மனைவி பத்திரகாளி (வயது70). இவர் சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த பத்திரகாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×