என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்13 Dec 2017 12:20 PM GMT (Updated: 13 Dec 2017 12:20 PM GMT)
செந்துறை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் ஆணை வாரி ஓடை உள்ளது. இந்த ஓடை பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உற்பத்தியாகி பின்னர் குழுமூர் வழியாக வெள்ளாற்றில் இணைகிறது.
தாமரைப்பூண்டி பகுதியில் குவாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது தாமரைப்பூண்டி பகுதியில் உள்ள ஆணைவாரி ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஓடையில் மணல் அள்ளிய பொன்பரப்பியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜீ (வயது 25), முல்லையூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், டிராக்டர் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மணல் அள்ள நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில் குழுமூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X