search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே கழுத்து அறுத்த நிலையில் தொழிலாளி பிணம்
    X

    திருவள்ளூர் அருகே கழுத்து அறுத்த நிலையில் தொழிலாளி பிணம்

    திருவள்ளூர் அருகே கழுத்து அறுத்த நிலையில் பிணம் தொழிலாளி சாவில் மர்மம்
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த விடையூர் கோவிலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு (எ) மணி. கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூரை அடுத்த எடப்பாளையத்தில் உள்ள ஒருவர் வீட்டில் கடந்த 3 நாட்களாக தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மற்ற தொழிலாளர்கள் சாப்பிட சென்றபோது மணி மட்டும் வரவில்லை. இதனால் அவரை கட்டிடத்தில் உள்ள அறைகளில் தேடினர். அப்போது மாடியில் மணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் மண்ணு என்கிற மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×