என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கழுத்து அறுத்த நிலையில் தொழிலாளி பிணம்
Byமாலை மலர்25 Nov 2017 4:34 PM GMT (Updated: 25 Nov 2017 4:34 PM GMT)
திருவள்ளூர் அருகே கழுத்து அறுத்த நிலையில் பிணம் தொழிலாளி சாவில் மர்மம்
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த விடையூர் கோவிலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு (எ) மணி. கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூரை அடுத்த எடப்பாளையத்தில் உள்ள ஒருவர் வீட்டில் கடந்த 3 நாட்களாக தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மற்ற தொழிலாளர்கள் சாப்பிட சென்றபோது மணி மட்டும் வரவில்லை. இதனால் அவரை கட்டிடத்தில் உள்ள அறைகளில் தேடினர். அப்போது மாடியில் மணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மண்ணு என்கிற மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த விடையூர் கோவிலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு (எ) மணி. கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூரை அடுத்த எடப்பாளையத்தில் உள்ள ஒருவர் வீட்டில் கடந்த 3 நாட்களாக தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மற்ற தொழிலாளர்கள் சாப்பிட சென்றபோது மணி மட்டும் வரவில்லை. இதனால் அவரை கட்டிடத்தில் உள்ள அறைகளில் தேடினர். அப்போது மாடியில் மணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மண்ணு என்கிற மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X