என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
Byமாலை மலர்23 Nov 2017 12:53 PM GMT (Updated: 23 Nov 2017 12:53 PM GMT)
பெரம்பலூரில் நிலத்தகராறு தொடர்பாக கோர்ட்டில் சாட்சியம் அளித்த வி.ஏ.ஓ.வை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் சுரேஷ்(34). இவர் ஏற்கனவே பெரம்பலூர் தெற்கு விஏஓ வாக பணி புரிந்தார். தற்போது சிறுவாச்சூர் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் சங்கு பேட்டையை சேர்ந்தவர் கருணாநிதி (30). பெரம்பலூர் விளா முத்துவர் சாலையில் உள்ள 10 சென்ட் நிலம் தகராறு தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் நடந்தது வருகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க அந்த பகுதியை சேர்ந்த விஏஓ சுரேசுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. இதனால் இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் சுரேஷ் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.
இதனால் வி.ஏ.ஓ சுரேசுக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏற்கனவே வாய்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விளாமுத்துவர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த விஏஓ சுரேஷை வழிமறித்து கருணாநிதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த விஏஓ சுரேஷ் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த விஏஓ சுரேஷ் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விஏஓவை தாக்கிய கருணாநிதியை தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் சுரேஷ்(34). இவர் ஏற்கனவே பெரம்பலூர் தெற்கு விஏஓ வாக பணி புரிந்தார். தற்போது சிறுவாச்சூர் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் சங்கு பேட்டையை சேர்ந்தவர் கருணாநிதி (30). பெரம்பலூர் விளா முத்துவர் சாலையில் உள்ள 10 சென்ட் நிலம் தகராறு தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் நடந்தது வருகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க அந்த பகுதியை சேர்ந்த விஏஓ சுரேசுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. இதனால் இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் சுரேஷ் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.
இதனால் வி.ஏ.ஓ சுரேசுக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏற்கனவே வாய்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விளாமுத்துவர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த விஏஓ சுரேஷை வழிமறித்து கருணாநிதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த விஏஓ சுரேஷ் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த விஏஓ சுரேஷ் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விஏஓவை தாக்கிய கருணாநிதியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X