என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வணிக நிறுவனங்கள்-தனி நபர் கூப்பன்-குலுக்கல் திட்டத்தில் பொருட்கள் வழங்க தடை: கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் பரிசுகள் வழங்கும் குலுக்கல் திட்டத்தை நடத்துகின்றனர்.
இதன் மூலம் பொருட்களை விலை அதிகரித்து விற்பது தரமற்ற பொருட்களை வழங்குவது எடை குறைந்த பழைய ஸ்டாக்கில் உள்ள பொருட்களை வழங்குவதாகவும் இதன் மூலம் நுகர்வோர்கள் வணிகர்களால் ஏமாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிநபர், விற்பனை கூடங்கள், வணிக நிறுவனங்கள் என யாரும் தங்களின் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன், குலுக்கல் திட்டங்கள் நடத்தி பொருட்கள் வழங்ககூடாது. மீறி வழங்கினால் தமிழ்நாடு பரிசுதிட்டம் தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்