search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளிக்குடி அருகே வாகனம் மோதி பெண் பலி
    X

    கள்ளிக்குடி அருகே வாகனம் மோதி பெண் பலி

    கள்ளிக்குடி அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை ஜெய்ஹிந்து புரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி மாரீஸ்வரி (வயது48). இவர்களுக்கு சிவசுப்பிரமணியன் (23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மகளை பார்ப்பதற்காக மாரீஸ்வரி மகனுடன் மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றார். அங்கு மகளை பார்த்து விட்டு பின்னர் இரவு இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.

    8 மணி அளவில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது. இதில் தாய் -மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    உயிருக்கு போராடி அவர்களை கள்ளிக்குடி போலீசார் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மாரீஸ்வரி பரிதாபமாக இறந்தார். சிவசுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×