என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயா டிவி, விவேக் வீடு உள்ளிட்ட பகுதிகளில் 5-வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
Byமாலை மலர்13 Nov 2017 4:18 AM GMT (Updated: 13 Nov 2017 4:19 AM GMT)
ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு உள்பட சசிகலா உறவினர்களின் வீடுகளில் 5-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.
சென்னை:
“ஆபரேஷன் கிளீன் மணி” என்ற பெயரில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புதுச்சேரியிலும் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் 187 இடங்களில் சுமார் 1,600 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
இதில், மிக முக்கியமான நிறுவனங்கள் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம், மிடாஸ் மது பான ஆலை, கோடநாடு எஸ்டேட் ஆகியவை ஆகும்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதைன 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஜெயா டிவி, ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு, கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று சோதனை நடத்தப்படுகிறது.
பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த ஆவணங்களை அவர்கள் சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்து வந்து உள்ளனர். தணிக்கை அதிகாரிகளின் உதவியுடன் அந்த ஆவணங்களை மதிப்பிடும் பணியில் வருமான வரி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் பணியும் நடைபெற்று வருகிறது.
“ஆபரேஷன் கிளீன் மணி” என்ற பெயரில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புதுச்சேரியிலும் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் 187 இடங்களில் சுமார் 1,600 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
இதில், மிக முக்கியமான நிறுவனங்கள் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம், மிடாஸ் மது பான ஆலை, கோடநாடு எஸ்டேட் ஆகியவை ஆகும்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதைன 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஜெயா டிவி, ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு, கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று சோதனை நடத்தப்படுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள்
பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த ஆவணங்களை அவர்கள் சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்து வந்து உள்ளனர். தணிக்கை அதிகாரிகளின் உதவியுடன் அந்த ஆவணங்களை மதிப்பிடும் பணியில் வருமான வரி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் பணியும் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X