என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏ.டி.எம். ரகசிய எண்ணை பெற்று எல்.ஐ.சி. ஏஜெண்டிடம் ரூ.98 ஆயிரம் மோசடி
Byமாலை மலர்22 Oct 2017 10:58 AM GMT (Updated: 22 Oct 2017 10:58 AM GMT)
எல்.ஐ.சி. ஏஜெண்டிடம் போனில் வங்கி மேலாளர் என கூறி நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரன்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது67). விவசாயியான இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் உள்ளார். சம்பவத்தன்று இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். அவர் தான் வங்கி மேலாளர் எனவும், பாலகிருஷ்ணனின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் புதிய கார்டுக்காக ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். இதை உண்மை என நம்பிய பாலகிருஷ்ணன் அவரிடம் ஏ.டி.எம். கார்டு எண்களை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் பால கிருஷ்ணன் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில் பாலகிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.98 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் உடனே வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதுபற்றி நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலகிருஷ்ணனிடம் போனில் வங்கி மேலாளர் என கூறி நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரன்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது67). விவசாயியான இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் உள்ளார். சம்பவத்தன்று இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். அவர் தான் வங்கி மேலாளர் எனவும், பாலகிருஷ்ணனின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் புதிய கார்டுக்காக ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். இதை உண்மை என நம்பிய பாலகிருஷ்ணன் அவரிடம் ஏ.டி.எம். கார்டு எண்களை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் பால கிருஷ்ணன் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில் பாலகிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.98 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் உடனே வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதுபற்றி நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலகிருஷ்ணனிடம் போனில் வங்கி மேலாளர் என கூறி நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X