என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே ஷூ கம்பெனியில் ரூ.15 லட்சம் தோல் பொருட்கள் கொள்ளை: காவலாளி கைது
Byமாலை மலர்22 Oct 2017 10:46 AM GMT (Updated: 22 Oct 2017 10:46 AM GMT)
ஆம்பூர் அருகே ஷூ கம்பெனியில் ரூ.15 லட்சம் தோல் பொருட்களை 5 பேர் கும்பலை கொண்டு கொள்ளையடித்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு பாலாற்றங்கரையோரம் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இரவு காவலாளியாக அய்தம்பட்டு கட்டோரப்பள்ளியை சேர்ந்த கணேசன் (வயது45) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு ஷூ கம்பெனிக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ரூ.15 லட்சம் மதிப்பிலான உயர் ரக தோல் பொருட்களை திருடி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசில் ஷூ கம்பெனி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இரவு காவல் பணியில் இருந்த கணேசனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 5 பேர் கும்பல் மூலம் திட்டம் தீட்டி தோல் பொருட்களை கொள்ளையடித்ததை கணேசன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார் தோல் பொருட்களுடன் தலைமறைவாக உள்ள 5 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு பாலாற்றங்கரையோரம் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இரவு காவலாளியாக அய்தம்பட்டு கட்டோரப்பள்ளியை சேர்ந்த கணேசன் (வயது45) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு ஷூ கம்பெனிக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ரூ.15 லட்சம் மதிப்பிலான உயர் ரக தோல் பொருட்களை திருடி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசில் ஷூ கம்பெனி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இரவு காவல் பணியில் இருந்த கணேசனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 5 பேர் கும்பல் மூலம் திட்டம் தீட்டி தோல் பொருட்களை கொள்ளையடித்ததை கணேசன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார் தோல் பொருட்களுடன் தலைமறைவாக உள்ள 5 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X