search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
    X

    வாடிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி

    வாடிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி திடீர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக காயத்ரிக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காயத்ரியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவரை ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×