search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலாப்பட்டில் காதல் திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
    X

    காலாப்பட்டில் காதல் திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    காதல் திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சேதராப்பட்டு:

    கிளியனூரை சேர்ந்தவர் ராஜா (வயது 34). இவரும், அதே பகுதியை சேர்ந்த தனம் (29) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு பிறகு காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    திருமணத்துக்கு பிறகு தனத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வில்லை. இது, ராஜாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. பண்டிகை காலத்தில் கூட தனத்தின் பெற்றோர் பேரக்குழந்தைகளை பார்க்க வரவில்லை என மனைவியிடம் கூறி ராஜா வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மனைவியை தையல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி விட்டு ராஜா வீட்டின் மின் விசிறியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவ சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×