search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே மதுவால் சீரழிந்த குடும்பம்: பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் தவிப்பு
    X

    கும்பகோணம் அருகே மதுவால் சீரழிந்த குடும்பம்: பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் தவிப்பு

    தந்தையின் மதுபழக்கத்தால் 4 குழந்தைகளை அனாதைகளாக்கிய சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ஒரக்கரை புதுத்தெருவை சேர்ந்த பார்த்தசாரதி மகன் பிரபாகரன் (வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் மதுவுக்கு செலவழித்து வந்தார். இதனால் அவரது மனைவி குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தார்.

    கணவரின் நடவடிக்கையால் மனவேதனையில் இருந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து பிரபாகரன் தனது குழந்தைகளை கவனிக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வி‌ஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    தாய் இறந்த நிலையில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் பிரபாகரனின் 4 குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாகி விட்டது.
    Next Story
    ×