என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே மதுவால் சீரழிந்த குடும்பம்: பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் தவிப்பு
Byமாலை மலர்10 Oct 2017 10:35 AM GMT (Updated: 10 Oct 2017 12:31 PM GMT)
தந்தையின் மதுபழக்கத்தால் 4 குழந்தைகளை அனாதைகளாக்கிய சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ஒரக்கரை புதுத்தெருவை சேர்ந்த பார்த்தசாரதி மகன் பிரபாகரன் (வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் மதுவுக்கு செலவழித்து வந்தார். இதனால் அவரது மனைவி குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தார்.
கணவரின் நடவடிக்கையால் மனவேதனையில் இருந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து பிரபாகரன் தனது குழந்தைகளை கவனிக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
தாய் இறந்த நிலையில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் பிரபாகரனின் 4 குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாகி விட்டது.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ஒரக்கரை புதுத்தெருவை சேர்ந்த பார்த்தசாரதி மகன் பிரபாகரன் (வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் மதுவுக்கு செலவழித்து வந்தார். இதனால் அவரது மனைவி குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தார்.
கணவரின் நடவடிக்கையால் மனவேதனையில் இருந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து பிரபாகரன் தனது குழந்தைகளை கவனிக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
தாய் இறந்த நிலையில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் பிரபாகரனின் 4 குழந்தைகளின் எதிர்காலமும் கேள்வி குறியாகி விட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X