search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடியை ஆட்சியில் அமரவைத்தது தான் சசிகலா செய்த ஒரே பாவம்: டி.டி.வி தினகரன்
    X

    எடப்பாடியை ஆட்சியில் அமரவைத்தது தான் சசிகலா செய்த ஒரே பாவம்: டி.டி.வி தினகரன்

    போதிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் மிக தாமதமாக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
    சென்னை:

    போதிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் மிக தாமதமாக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் பரோல் கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பத்திருந்தார்.

    அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சிறைத்துறை சில நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, சிறை வளாகத்தில் இருந்து இன்று மாலை கிளம்பிய அவர் கார் மூலமாகவே சென்னை வந்தடைந்தார். அவருடன் டி.டி.வி தினகரன் உள்ளிட்டவர்களும் வந்தனர்.

    சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகன் வீட்டுக்கு வந்தடைந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்றனர். வீட்டின் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி தினகரன் கூறியதாவது:-

    போதிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் மிக தாமதமாக பரோல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளால் தான் 5 நாட்கள் மட்டுமே பரோல் கிடைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால், சசிகலா வரும் வழியெங்கும் தொண்டர்கள் அமைதியான முறையிலேயே வரவேற்பு அளித்துள்ளனர்.

    சசிகலாவின் அதிகாரப்பூர்வ முகவரியான போயஸ் கார்டனில் தங்கிக்கொள்ளலாம் என சிறை அதிகாரிகள் அனுமதியளித்தனர். ஆனால், மருத்துவமனை மற்றும் வீடு தவிர எங்கும் செல்லக்கூடாது என தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமர்த்தியது தவிர சசிகலா எந்த பாவமும் செய்யாதவர்.

    சசிகலாவுக்கு பரோல் வழங்கியதும் அமைச்சர்கள் மற்றும் பல எம்.எல்.ஏக்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால். அவர்கள் பெயரை கூற முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடிப்பார்கள்.

    திறமையில்லாத இந்த ஆட்சி நீதிமன்றத்தின் துணையுடன் வீட்டுக்கு அனுப்பப்படும். நாளை மருத்துவமனைக்கு செல்லும் சசிகலா, நடராஜனை பார்க்க உள்ளார்.

    இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார்.

    Next Story
    ×