என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயனாவரத்தில் மாநகர பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்25 Sep 2017 7:25 AM GMT (Updated: 25 Sep 2017 7:25 AM GMT)
அயனாவரத்தில் மாநகர பஸ் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம், பாரதி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டர்.
இவர் நேற்று இரவு வேலை முடிந்து உடன் வேலை பார்க்கும் நண்பர் வில்லிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த தமிழரசனுடன்(20) மோட்டார் சைக்கிளில் வந்தார். அயனாவரம் நூர் ஓட்டல் அருகே வந்த போது முன்னாள் சென்ற மாநகர பஸ்சை (எண் 48) முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் உரசியது.
நிலைதடுமாறிய மணிகண்டனும், தமிழரசனும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். பஸ்சின் சக்கரத்தில் சிக்கியவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியான 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் உயிர் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.
அண்ணாநகர் போக்கு வரத்து புலனாய்வு உதவி கமிஷனர் நடராஜன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வில்லிவாக்கம், பாரதி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டர்.
இவர் நேற்று இரவு வேலை முடிந்து உடன் வேலை பார்க்கும் நண்பர் வில்லிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த தமிழரசனுடன்(20) மோட்டார் சைக்கிளில் வந்தார். அயனாவரம் நூர் ஓட்டல் அருகே வந்த போது முன்னாள் சென்ற மாநகர பஸ்சை (எண் 48) முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் உரசியது.
நிலைதடுமாறிய மணிகண்டனும், தமிழரசனும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். பஸ்சின் சக்கரத்தில் சிக்கியவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியான 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் உயிர் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.
அண்ணாநகர் போக்கு வரத்து புலனாய்வு உதவி கமிஷனர் நடராஜன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X