search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயனாவரத்தில் மாநகர பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    அயனாவரத்தில் மாநகர பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

    அயனாவரத்தில் மாநகர பஸ் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், பாரதி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டர்.

    இவர் நேற்று இரவு வேலை முடிந்து உடன் வேலை பார்க்கும் நண்பர் வில்லிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த தமிழரசனுடன்(20) மோட்டார் சைக்கிளில் வந்தார். அயனாவரம் நூர் ஓட்டல் அருகே வந்த போது முன்னாள் சென்ற மாநகர பஸ்சை (எண் 48) முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் உரசியது.

    நிலைதடுமாறிய மணிகண்டனும், தமிழரசனும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். பஸ்சின் சக்கரத்தில் சிக்கியவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    பலியான 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் உயிர் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

    அண்ணாநகர் போக்கு வரத்து புலனாய்வு உதவி கமி‌ஷனர் நடராஜன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    Next Story
    ×