என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே விபத்து: கல்லூரி மாணவி பலி
Byமாலை மலர்23 Sep 2017 5:39 PM GMT (Updated: 23 Sep 2017 5:39 PM GMT)
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள பாறைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அர்ச்சனா (வயது19). அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து உறவினர் பால்பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் பாறைகுளம் புறப்பட்டார். 4 வழிச்சாலையில் மேலக்கோட்டை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சரிந்தது.
இந்த விபத்தில் அர்ச்சனா பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை அர்ச்சனா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X