என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் ஆறு நுரைக்கு சோப்பு தண்ணீரே காரணம்: அமைச்சர் கருப்பண்ணன்
Byமாலை மலர்23 Sep 2017 5:29 AM GMT (Updated: 23 Sep 2017 5:29 AM GMT)
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நொய்யல் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
அமைச்சர் செல்லூர் ராஜூ சில மாதங்களுக்கு முன்பு ஆற்று தண்ணீர் ஆவியாதலை தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டார். ஆனால் தெர்மா கோல் தண்ணீரில் மிதந்த படி சிறிதுநேரத்தில் கரைக்கு வந்தது.
அமைச்சரின் இந்த புதிய யோசனை சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலை தளங்களிலும் கேலி- கிண்டலுடன் கருத்துகள் பரிமாறப்பட்டது.
இதேபோல் அமைச்சர் கருப்பண்ணனின் பேச்சால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள நீருடன் சாயக் கழிவுகளும் சென்றது. இதனால் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி வழிந்தது.
இதை பார்த்த சமூக ஆர்வலர்கள், சாயக் கழிவுகளால் நுரை வந்து நொய்யல் ஆறு மாசுபடுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட சாய சலவை பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நொய்யல் ஆற்றில் அதிகளவில் நுரை வந்தது. இது சாயக் கழிவுகளால் ஏற்பட்டது என்ற புகார் எழுந்தது.
ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ சில மாதங்களுக்கு முன்பு ஆற்று தண்ணீர் ஆவியாதலை தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டார். ஆனால் தெர்மா கோல் தண்ணீரில் மிதந்த படி சிறிதுநேரத்தில் கரைக்கு வந்தது.
அமைச்சரின் இந்த புதிய யோசனை சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலை தளங்களிலும் கேலி- கிண்டலுடன் கருத்துகள் பரிமாறப்பட்டது.
இதேபோல் அமைச்சர் கருப்பண்ணனின் பேச்சால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள நீருடன் சாயக் கழிவுகளும் சென்றது. இதனால் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி வழிந்தது.
இதை பார்த்த சமூக ஆர்வலர்கள், சாயக் கழிவுகளால் நுரை வந்து நொய்யல் ஆறு மாசுபடுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட சாய சலவை பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நொய்யல் ஆற்றில் அதிகளவில் நுரை வந்தது. இது சாயக் கழிவுகளால் ஏற்பட்டது என்ற புகார் எழுந்தது.
ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X