search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுமியை கடத்தி கற்பழிக்க முயற்சி - 2 வாலிபர்கள் சிக்கினர்
    X

    ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுமியை கடத்தி கற்பழிக்க முயற்சி - 2 வாலிபர்கள் சிக்கினர்

    ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுமியை கற்பழிக்க முயன்ற 2 பேர் சிக்கினர்.
    ஆம்பூர்:

    ஆம்பூரை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் மனைவி, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக, ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை, கவனிக்க அவரது 15 வயது மகள், ஆஸ்பத்திரியில் நேற்றிரவு தங்கியிருந்தார்.

    நள்ளிரவு 1.30 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்ற அந்த சிறுமியை. அங்கிருந்த 18 வயதுடைய 2 வாலிபர்கள், பார்த்து பின் தொடர்ந்தனர். அச்சமடைந்த மாணவி, ஆஸ்பத்திரிக்குள் செல்ல முயன்றார்.

    இதையடுத்து, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக, 2 வாலிபர்களும் கைக்குட்டையால் வாயை பொத்தி தூக்கிச் செல்ல முயன்றனர். தப்பித்துச் செல்ல சிறுமி போராடினார்.

    இதைப்பார்த்த, அங்கிருந்த மக்கள், வாலிபர்களை பிடித்து சிறுமியை மீட்டனர். இதையடுத்து, 2 வாலிபர்களையும் ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார், பிடிபட்ட 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×