என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி
சேதராப்பட்டு:
திண்டிவனத்தை அடுத்த பாமுண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் தனது குடும்பத்துடன் திருச்சிற்றம்பலம் ஜவகர் நகர் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமலுடன் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து வானூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்தனர்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு காய்ச்சல் அதிகமானது. வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது மனைவி லட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக தமிழக பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் இறந்துள்ளனர். ராஜேந்திரனும் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன ராஜேந்திரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்