search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே அரசு பஸ்மோதி பிளஸ்-2 மாணவன் பலி
    X

    தேவதானப்பட்டி அருகே அரசு பஸ்மோதி பிளஸ்-2 மாணவன் பலி

    தேவதானப்பட்டி அருகே அரசு பஸ்மோதி பிளஸ்-2 மாணவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மருகால்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் ராஜபாண்டி (வயது 17). ஏ. வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மதியம் இவர் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு திரும்பி கொண்டு இருந்தார். பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ராஜபாண்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராஜபாண்டியை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜபாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×