என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான 108 ஆம்புலன்ஸ்
Byமாலை மலர்11 Sep 2017 4:41 PM GMT (Updated: 11 Sep 2017 4:41 PM GMT)
திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்ததில் 108 ஆம்புலன்ஸ் வேன் எரிந்து நாசமானது.
எரியோடு:
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சுவாச கோளாறு காரணமாக நேற்று இரவு எரியோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிலமை மோசமானது. எனவே வடமதுரை பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது.
இந்த வேனை டிரைவர் சுரேஷ்குமார் ஓட்டினார். அவருடன் மருத்துவ உதவியாளர் பன்னீர்செல்வம் வந்தார். எரியோடு அருகே வந்த போது ஆம்புலன்ஸ் வேனில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வேனில் தீ பரவியது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும உதவியாளர் கீழே குதித்து தப்பினர். சிறிது நேரத்தில் வேன் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வேன் முழுவதும் எரிந்து நாசமானது.
இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சுவாச கோளாறு காரணமாக நேற்று இரவு எரியோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிலமை மோசமானது. எனவே வடமதுரை பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது.
இந்த வேனை டிரைவர் சுரேஷ்குமார் ஓட்டினார். அவருடன் மருத்துவ உதவியாளர் பன்னீர்செல்வம் வந்தார். எரியோடு அருகே வந்த போது ஆம்புலன்ஸ் வேனில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வேனில் தீ பரவியது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும உதவியாளர் கீழே குதித்து தப்பினர். சிறிது நேரத்தில் வேன் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வேன் முழுவதும் எரிந்து நாசமானது.
இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X