search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான 108 ஆம்புலன்ஸ்
    X

    திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்ததில் எரிந்து நாசமான 108 ஆம்புலன்ஸ்

    திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்ததில் 108 ஆம்புலன்ஸ் வேன் எரிந்து நாசமானது.
    எரியோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சுவாச கோளாறு காரணமாக நேற்று இரவு எரியோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிலமை மோசமானது. எனவே வடமதுரை பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது.

    இந்த வேனை டிரைவர் சுரேஷ்குமார் ஓட்டினார். அவருடன் மருத்துவ உதவியாளர் பன்னீர்செல்வம் வந்தார். எரியோடு அருகே வந்த போது ஆம்புலன்ஸ் வேனில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வேனில் தீ பரவியது.

    அதிர்ச்சியடைந்த டிரைவர் மற்றும உதவியாளர் கீழே குதித்து தப்பினர். சிறிது நேரத்தில் வேன் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வேன் முழுவதும் எரிந்து நாசமானது.

    இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×