என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 8 நாளில் புதுப்பெண் மாயம்
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (19) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் ஆண்டிப்பட்டிக்கு ஜவுளி எடுக்கச் சென்றனர்.
உடன் பாக்கியநாதன் தங்கை கிருஷ்ணவேணியும் சென்றார். துணி எடுத்துக் கொண்டு இருக்கும் போது கீர்த்திகா, கிருஷ்ணவேணி இருவரும் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றனர்.
கிருஷ்ணவேணியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு சென்ற கீர்த்திகா நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. தனது அண்ணனிடம் இது குறித்து கிருஷ்ணவேணி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பாக்கியநாதன் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காததால் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்