search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 8 நாளில் புதுப்பெண் மாயம்
    X

    ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 8 நாளில் புதுப்பெண் மாயம்

    ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 8 நாளில் மாயமான புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (19) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் ஆண்டிப்பட்டிக்கு ஜவுளி எடுக்கச் சென்றனர்.

    உடன் பாக்கியநாதன் தங்கை கிருஷ்ணவேணியும் சென்றார். துணி எடுத்துக் கொண்டு இருக்கும் போது கீர்த்திகா, கிருஷ்ணவேணி இருவரும் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றனர்.

    கிருஷ்ணவேணியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு சென்ற கீர்த்திகா நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. தனது அண்ணனிடம் இது குறித்து கிருஷ்ணவேணி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பாக்கியநாதன் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காததால் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×