search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையில் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
    X

    டாஸ்மாக் கடையில் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் கொள்ளை

    பெரியபாளையம் அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. திருவள்ளூரை சேர்ந்த செந்தில்நாதன் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் அவர் மதுக்கடையை திறந்தார். அப்போது பின்பக்க சுவற்றில் துளை போடப்பட்டு இருந்தது. மதுபாட்டில்களும் கொள்ளை போய் இருந்தன.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் சுவற்றில் துளைபோட்டு புகுந்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.

    மதுக்கடையில் விற்பனையான சுமார் ரூ.2 லட்சத்தை சூப்பர் வைசர் செந்தில்நாதன் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இதனால் அந்த பணம் தப்பியது.

    இது குறித்து பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×