search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
    X

    அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்று பேசினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.பி. இளவரசன் மற்றும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.

    தொடர்ந்து விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதிகாரிகள் நிதி இல்லை என்றனர். மக்களிடம் கையேந்தி இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நிறைவேற்றினார். அவர் வழியில் அம்மா அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றினார். அவரின் 100-வது ஆண்டு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் திரண்டு வந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மருதமுத்து, குமரவேல், கல்யாணசுந்தரம், வரதராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×