search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 41.95 அடியாக உயர்ந்தது. இன்றும் மேலும் ஒரு அடி உயர்ந்து 43.10 அடியாக உயர்ந்தது. இதனால் 2 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று முன்தினம் 8150 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8133 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 7873 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கடந்த 2 நாட்களாக மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 41.04 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 41.95 அடியாக உயர்ந்தது. இன்றும் மேலும் ஒரு அடி உயர்ந்து 43.10 அடியாக உயர்ந்தது. இதனால் 2 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் அணைக்கு இதே அளவு தண்ணீர் வந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×