என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கார் திருடிய வாலிபர் கைது: திருமங்கலத்தில் பிடிபட்டார்
Byமாலை மலர்11 Aug 2017 3:06 PM GMT (Updated: 11 Aug 2017 3:06 PM GMT)
சென்னையில் கார் திருடிய வாலிபரை திருமங்கலம் டோல்கேட் பகுதியில் போலீசார் கைது செய்து அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
பேரையூர்:
சென்னை ராஜமங்கலம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ரூ. 6¾ லட்சம் மதிப்புள்ள கார் திருட்டு போனது. இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் திருடிய நபரை தேடி வந்தனர்.
மேலும் கார் திருட்டு போனது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் டோல்கேட் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையில் திருட்டு போனதாக கூறப்பட்ட கார் வந்தது. உடனே காரை மறித்து உள்ளே இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சென்னை ராஜமங்கலம் பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராதாகிருஷ்ணன் அந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். ரமேஷ் ராஜமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X