search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் பொன்னகரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    திண்டுக்கல் பொன்னகரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    திண்டுக்கல் பொன்னகரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள பொன்னகரம், தமிழன் நகர், மல்லிகை நகர், நம்பி கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து அடியனூத்து பஞ்சாயத்து நிர்வாகம் வசம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் பொன்னகரத்தில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×