search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    தொண்டி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொண்டி பஸ் நிலையம் எதிரே கிளை செயலாளர் காளிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சந்தனம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காசிநாததுரை தாலுகா குழு உறுப்பினர் நாகநாதன் உள்பட பலர் பேசினர்.

    தொண்டி பேரூராட்சி பகுதியில் வாரத்திற்கு இருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    திருவாடானை தாலுகாவில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு தொண்டியைப்போல காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் தனி குடிநீர் இணைப்பு வழங்கி மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேரூராட்சி பகுதி சாலைகளை உடனடியாக பராமரிப்பு செய்து, பழு தடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல் அட்டை, கடல் குதிரை மீதான தடையை நீக்க வேண்டும்.

    மீனவர்களையும்,விவசாயிகளையும் பாதிக்கின்ற வகையில் உள்ள இரால் பண்ணைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு தலைவர் சேகுஅலியார் நன்றி கூறினார்.

    Next Story
    ×