search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு
    X

    திருச்சியில் போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு

    திருச்சியில் போலீஸ்காரர் வீட்டில் 9 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி

    திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பிரபாகரன் (வயது 29). இவர் மனைவியுடன் திருச்சி கே.கே.நகரில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் முன்பகுதியில் வைத்து விட்டு சென்று உள்ளார்.

    பின்னர் இரவு மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து பிரபாகரன் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×