search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் நண்பரை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
    X

    தூத்துக்குடியில் நண்பரை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

    தூத்துக்குடியில் நண்பரை கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மாரியப்பன். தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்தவர் தீபக். (வயது 25). நண்பர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பஸ்சில் வேலைக்கு சென்றனர்.

    அப்போது இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தீபக் மாரியப்பனை கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் தீபக்கை கைது செய்தனர்.

    Next Story
    ×