search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க பிரமுகர் பலி
    X

    ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க பிரமுகர் பலி

    திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்து கொண்டிருக்கும் போது தி.மு.க பிரமுகர் இருசக்கர மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக இறந்தார்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கல கோட்டை மேலையூரைச் சேர்ந்தவர் வீரய்யன் (வயது 70). தி.மு.க பிரமுகர். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று உறவினர் திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் வீரய்யன் சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தலையாமங்களம் அருகே வரும் போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் வீரய்யன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியுடன் முதலுதவி கொடுக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு வீரய்யன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×