என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆனைமலை ஓட்டலில் பெண் ஊழியரை அறைந்த லாரி டிரைவர் கைது
ஆனைமலை:
ஆனைமலை வளந்தாய மரம் என்ற இடத்தில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று இரவு வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்த இளங்கோ (வயது 24). லாரி டிரைவர். இவரது நண்பர்கள் செந்தில், வினோத் உள்பட 5 பேர் சாப்பிட வந்தனர். 5 பேரும் சாப்பிட்டனர்.
ஓட்டலில் கேஷியராக பெரியபோதுவை சேர்ந்த கலைச்செல்வி (20) என்ற பெண் இருந்தார். சாப்பிட்டு முடித்த பின்னர் ரூ.450 பில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பில் தொகையை செலுத்துமாறு கலைச்செல்வி கேட்டார். ஆனால் பில்தொகையை செலுத்த இளங்கோ மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கே ஓட்டல் கேஷியர் கலைச் செல்வியின் கன்னத்தில் 2 முறை அறைந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இளங்கோவை வெளியேற்றினர்.
இது குறித்து கலைச்செல்வி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் லாரி டிரைவர் இளங்கோவை இன்று காலை கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்